Monday, August 6, 2012



அலைகடலும் ஓய்ந்திருக்க 
அகக் கடல்தான் பொங்குவதேன்? 

நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே! 

வேட்டுவரும் வில்லியரும் 
வீடு நோக்கி ஏகுவரே

வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க

மான்விழியாள் பெண்ணொருத்தி
மனதில் புயல் அடிப்பதுமேன்? 

வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்

காரிகையாள் உளந்தனிலே
காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?" 

Sunday, July 18, 2010

என் மனச்சிறை

அன்பு குற்றம் புரிந்தவர்கள் தான்
இதில் அடைக்கப்படுவார்கள்
அடிக்கடி இச்சிறை கதவுகளை
திறந்து மூடுவது அரிது என்பதால் தான்
முதல் குற்றவாளிக்கே
ஆயுள் தண்டனை கொடுத்துவிட்டேன்..

உடைப்பட்டால் ஒழிய இக்கதவுகள் திறவுபடாது
ஏனெனில், இந்த ஆய்ட் கைதி
பிறரை உள்ளேப் பிரவேசிக்க விட்டால் தானே..